சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பிப். 9ஆம் தேதி தொடங்கி பிப். 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மேலும், அரசு தேர்வுத்துறையின் சார்பில் பொதுத் தேர்வினை போல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அரசு தேர்வுத்துறையின் விதிமுறைகளை பின்பற்றாமல் அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே வினாத்தாள்களை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கியிருந்தார்.
லீக் ஆகும் வினாத்தாள்கள்
இதனால், பிப். 13ஆம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம் பாடம் ஆகியவற்றின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானது. இதேபோல், நேற்று (பிப். 14) 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது.