சென்னை: அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையமாக 850 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் செயல்பட்டுவருகிறது.
தற்போது அதிகரித்துவரும் கோவிட்19 மூன்றாம் அலையை எதிர்கொள்ள, 1100 படுக்கை வசதிகள் வரை அதிகப்படுத்த தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் கொண்டு செயல்படும்.
பல மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்பு
மேலும் 100 குழந்தைகள் சிறப்பு சிகிச்சை படுக்கைகள், 15 குழந்தைகள் தீவிர சிசிச்சைப் படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருந்தொற்றினைச் சமாளிக்கும் வகையில் 200 வென்டிலேட்டர் கருவிகள், 800-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், இரண்டு அதிநவீன ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள், 34 KLD சேமிப்பு அளவிலான திரவ ஆக்சிஜன் கொள்கலன் ஆகியன தயார் நிலையில் உள்ளன.