தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா காலத்தில் 101 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்! - கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: 10 மாத கரோனா காலத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

airport
airport

By

Published : Jan 27, 2021, 4:38 PM IST

சென்னை விமான நிலையம் மற்றும் சரக்கக சுங்க இலாகா அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ராஜன் சவுத்ரி, ”சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 10 மாத கரோனா ஊரடங்கு காலத்தில், குற்றங்களை தடுப்பது மிகுந்த சவாலாக இருந்தது. கரோனா காலத்தில் பன்னாட்டு முனையத்திற்கு 540 சிறப்பு விமானங்கள் வந்தன. அதில், 2 லட்சம் பேர் வரை பயணம் செய்தனர்.

இக்காலங்களில், பன்னாட்டு சரக்ககம் மற்றும் பன்னாட்டு தபால் நிலையங்களில் கடத்தப்பட்டதாக, ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள, 102 போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 11 பேர் பிடிபட்டனர். மேலும், தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய 80 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.46 கோடி மதிப்பிலான 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, உரிய அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட எலி, அணில், ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட உயிரினங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தென்னிந்தியாவிலேயே கரோனா காலத்தில் சிறந்த முனையமாக செயல்பட்டதாக சென்னை விமான நிலையம் விளங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சீர்காழி நகை கொள்ளை: என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details