சென்னை:திருப்பெரும்புதூரின் காட்ரம்பாக்கம் விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் கழிவுத் தொட்டியை இன்று (14.2.2021) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், முருகன், ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.