தமிழ்நாடு

tamil nadu

ரம்ஜான் பண்டிகை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி விலை உயர்வு

By

Published : May 3, 2022, 1:34 PM IST

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

Sathyamangalam weekly vegetable market
Sathyamangalam weekly vegetable market

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான தாளவாடியில் பெய்த மழையால் தக்காளி செடிகள் சேதமடைந்ததாலும், கர்நாடகத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்தாலும் சத்தியமங்கலத்தில் தக்காளி விலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை குறையாமல் ரூ.60 ஆக நீடித்தது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.60-இல் இருந்து 40 ஆக சரிந்ததுள்ளது. இதனால் தக்காளி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசாலா பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இஞ்சி கிலோ ரூ.30-இல் இருந்து ரூ.50 ஆகவும், கொத்தமல்லி தழை ஒரு கட்டு ரூ.10 இருந்து ரூ.40 ஆகவும், புதினா கட்டு ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: 27ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

ABOUT THE AUTHOR

...view details