மும்பை:நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (APSEZ), 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒருங்கிணைந்த நிகர லாபம் 16.86 விழுக்காடு சரிந்து, தற்போது ரூ.1,091.56 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,312.9 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவித்திருந்தது. மேலும், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 5,073 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 5,099.25 கோடியாக உயர்ந்துள்ளது.