தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிரதமர் பதவியேற்பு - உயர்வில் பங்குச் சந்தை

மும்பை: மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை பெரும் உயர்வை சந்தித்துள்ளது.

By

Published : May 30, 2019, 12:51 PM IST

பங்குச்சந்தை

மீட்டும் ஆட்சியமைக்கும் பாஜக அரசின் பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் பதவியேற்கவுள்ளார். கடந்த முறை ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசே பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் முதலீட்டாளர்களுக்கு பாஜக அரசின் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பங்குச்சந்தையில் கடந்த 5 நாட்களாகவே முதலீடுகள் வெகுவாக குவிந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டு வருகிறது. இன்று காலை முதலே பங்குச் சந்தையில் நல்ல உயர்வு தொடர்ச்சியாக உள்ளது. மத்திய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 240 புள்ளிகள் வரை உயர்ந்து 39 ஆயிரத்து 742 புள்ளிகளாக உள்ளது. இன்று மாலை எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details