தமிழ்நாடு

tamil nadu

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை!

By

Published : Sep 17, 2020, 7:04 PM IST

மும்பை : சர்வதேச பங்குச்சந்தைகளின் தாக்கம் காரணமாக இரண்டு நாள்களாக ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தை, இன்று சரிவில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

Market Roundup
Market Roundup

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப்.16) வர்த்தகமானதைவிட சுமார் 99 புள்ளிகள் சரிந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப்.16) நாள் முழுவதும் சரிவிலேயே வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 323 புள்ளிகள் (0.82 விழுக்காடு) சரிந்து 38,979.85 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88.45 புள்ளிகள் (0.72 விழுக்காடு) சரிந்து 11,516.10 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு விழுக்காடு வரை குறைந்தது. அதேபோல பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், எல்&டி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

அதேபோல் ஹெச்.சி.எல். டெக், இன்போசிஸ், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

சர்வதேசப் பங்குச்சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவில் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதேபோல் ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் சரிவிலேயே தற்போது வர்த்தகமாகி வருகின்றன.

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை!

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 0.26 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 42.11 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க:எதற்கும் தயாராகவே உள்ளோம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details