மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருதல், பெங்களூரு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் கொஞ்சம் சாதகமான சூழலை உருவாக்கியது. இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் நிறுவன பங்கு தனது வாழ்நாள் உயர்வைத் தொட்டு இன்று (ஜூலை23) வர்த்தகமானது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
ஈச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஆக்ஸிஸ் வங்கி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின. கடந்த சில நாள்களாக விலை அதிகரித்த ரிலையன்ஸ்கூட நேற்று விலை சரிந்து வர்த்தகமானது.
வால்மார்ட் இந்தியா ஃபிளிப்கார்ட் வசம்: ஜியோ மார்ட்டுடன் போட்டி போட திட்டம்!
பங்குச் சந்தை