தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் - ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்வைச் சந்தித்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Market Roundup
Market Roundup

By

Published : Oct 27, 2020, 6:57 PM IST

வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 337 புள்ளிகள் (0.94 விழுக்காடு) உயர்ந்து 40,522.10 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121.65 புள்ளிகள் (1.03 விழுக்காடு) உயர்ந்து 11,889.40 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக கோடக் வங்கியின் பங்குகள் 11.70 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை எச்.டி.எஃப்.சி, டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,240-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.62,400-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.23-க்கும், டீசல் ரூ.76.03-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம்தான் - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details