வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 337 புள்ளிகள் (0.94 விழுக்காடு) உயர்ந்து 40,522.10 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121.65 புள்ளிகள் (1.03 விழுக்காடு) உயர்ந்து 11,889.40 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக கோடக் வங்கியின் பங்குகள் 11.70 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை எச்.டி.எஃப்.சி, டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.