தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை! - Business news

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.31 புள்ளிகள் உயர்ந்து 40,593.80 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

Market Roundup
Market Roundup

By

Published : Oct 12, 2020, 10:40 PM IST

மும்பை: முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையால் பங்குச் சந்தை இன்று நல்ல ஏற்றத்தைப் பெற்றது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

கோஃபோர்ஜி லிமிடெட், மைண்ட்-ட்ரீ, ஸ்ரீராம் டிரான்ஸ், ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா, எஸ்கார்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. வேதாந்தா, மதர்சன் சுமி, பாங்க் ஆஃப் பரோடா, ஜீ என்டர்டெயின்மென்ட், அப்பல்லோ டயர்கள் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.31 புள்ளிகள் உயர்ந்து 40,593.80 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 16.75 புள்ளிகள் உயர்ந்து 11,930.95 புள்ளிகளில் நிறைவுற்றது.

ரூபாய்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ரூ.73.27 காசுகளாக இருந்தது.

பங்குச் சந்தை நிலவரம்

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 69 புள்ளிகள் சரிந்து 2 ஆயிரத்து 891 ரூபாயாக இருந்தது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 273 புள்ளிகள் உயர்ந்து 51 ஆயிரத்து 090 ரூபாயாக இருந்தது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 187 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 071 ரூபாயாக இருந்தது.

ABOUT THE AUTHOR

...view details