தமிழ்நாடு

tamil nadu

சந்தை நிலவரம்: மந்தநிலையில் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தைகள்

By

Published : Dec 15, 2020, 6:50 PM IST

நேற்று சிறப்பான உயர்வு கண்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று மந்தமான வர்த்தகத்தையே மேற்கொண்டன.

Market Roundup
Market Roundup

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 10 புள்ளிகள் உயர்ந்து 46,263.17 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசியப் பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 10 புள்ளிகள் உயர்ந்து 13,567.85 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல ஈசர் மோட்டார்ஸ், ஜெ.எஸ். ஸ்டீல், ஸ்ரீசிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. மறுபுறம் , இந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே இந்தியா, பி.பி.சி.எல்., ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

மந்த நிலையில் பங்குச் சந்தைகள்

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 180 ரூபாய் உயர்ந்து 46,290 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 950 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 64,150 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.23 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:'20 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி வேற லெவலில் இருக்கும்' - அடித்துக் கூறும் அம்பானி

ABOUT THE AUTHOR

...view details