ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம், இந்திய ரயில்வேயில் உணவு பொருட்கள், டிக்கெட் புக்கிங் மற்றும் இந்திய ரயில் நிலையங்களில் குடிதண்ணீா் ஆகிய சேவைகளை கட்டணத்தின் போில் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் தற்போது விாிவாக்க பணிக்காக, பங்குகள் வெளியீட்டில் இறங்க உள்ளது. அதன்மூலம், ரூ.640 கோடிகள் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று விற்பனைக்கு வருகின்றது. பங்குகளின் ஆரம்ப விலை (IPO) ரூ.315 முதல் ரூ.320 வரை நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.
சில்லரை முதலீட்டாளர்களும் முதலீடு செய்யலாம். அங்கீகாிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.10 தள்ளுபடி செய்யப்படும். மொத்தம் இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.