பொது விடுமுறை தினமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை எப்போதும் போல் பங்குச் சந்தை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகங்களுக்கு இன்று விடுமுறை - currency
மும்பை: ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு வர்த்தக செயல்பாடுகள் நடைபெறாது என செபி (SEBI) தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பங்கு சந்தை
நேற்றைய வர்த்தகச் சந்தை முடிவில், 10 ஆண்டுகால பத்திரப் பங்கின் மதிப்பு சரிந்து 7.52 விழுக்காடாக இருந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 81 காசுகளாக இருந்தது. அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு 38,386.75 புள்ளிகளுடன் முடிந்திருந்தது.
Last Updated : Mar 21, 2019, 1:45 PM IST