தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2020, 11:51 PM IST

ETV Bharat / business

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: வட்டி விகிதத்தை அதிகரித்த ஐசிஐசிஐ வங்கி!

மும்பை: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதத்தை 0.50 விழுக்காட்டிலிருந்து 0.80 விழுக்காடு உயர்த்தி, ஆண்டுக்கு 6.55 விழுக்காடு வட்டி வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

ICICI Bank
ICICI Bank

மூத்த குடிமக்களுக்கு சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) 2004ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஆபத்து இல்லாத முதலீட்டை வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஐசிஐசிஐ வங்கி சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்கள் இரண்டு கோடி ரூபாய்க்கும் கீழ், முதலீடு செய்திருந்தால், ஆண்டுக்கு அவர்களுக்கு 6.55 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்பதே அது.

இந்த அதிக வட்டி வழங்கும் திட்டத்தில் சேர, செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் பெரும்பாலான மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் வரும் வருமானத்தை அதிகம் நம்பி இருப்பதால், வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு தொழிற்சாலையில் வெளியேறிய வெள்ளைப்புகை

ABOUT THE AUTHOR

...view details