தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் எதிரொலி - பங்குச் சந்தைகள் கடும் சரிவு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை தொடங்கியது முதலே பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

By

Published : Feb 1, 2020, 5:55 PM IST

market updates
market updates

இறுதியில் இன்று மாலை, மும்பை பங்குச் சந்தை எண் சென்செக்ஸ் 988 புள்ளிகள் குறைந்து 39,735 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 374 புள்ளிகள் குறைந்து 11,661 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை மீட்க பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததால், முதலீட்டாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதுவே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

சென்செக்ஸ்

ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 6.97 விழுக்காடு வரை குறைந்தது. அதேபோல் எல் & டி, எச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ, ஓ.என்.ஜி.சி., ஐசிஐசி வங்கி, இன்டஸ்டிரியல் வங்கி உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தது.

நிஃப்டி

அதேபோல் டிசிஎஸ், எச்.யு.எல், நெஸ்லே இந்தியா, டெக் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குள் ஏற்றமடைந்தன.

இதையும் படிங்க:'10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு

ABOUT THE AUTHOR

...view details