தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2019, 6:03 PM IST

ETV Bharat / business

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வங்கி பங்குகள்!

மும்பை: இன்றைய பங்குச்சந்தை, உயர்வை சந்தித்த நிலையில் சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் வங்கி பங்குகள் அதிக அளவு இடம்பிடித்துள்ளன.

stock market

இன்றைய பங்குச்சந்தை முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 221. 55 புள்ளிகள் உயர்ந்து, 40,469.78 எனவும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43 .80 புள்ளிகள் உயர்ந்து 11,961 எனவும் வர்த்தகமாகியுள்ளது.

மேலும் சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் இன்போசிஸ், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் கம்பெனி, சிப்லா போன்ற பங்குகள் இடம் பெற்ற நிலையில் டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இது வரை சரிவைச் சந்தித்து வந்த எம்டிஎன்எல் பங்குகள் நேற்று மூன்று விழுக்காடு உயர்வைச் சந்தித்த நிலையில், இன்று ஐந்து விழுக்காடு உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: 50, 60 எல்லாம் இல்ல... நூறுதான்! ஃபோன் கேமராவில் சதம் விளாசிய மீ

ABOUT THE AUTHOR

...view details