நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை காணப்படுவது உண்மைதான். இந்த தற்காலிக சரிவை பொருளாதார வீழ்ச்சியென மிகைப்படுத்தக் கூடாது. தேக்கத்திலிருக்கும் ஆட்டோமொபைல் துறை மீண்டும் எழுச்சியைக் காண தொடங்கியுள்ளது. நாட்டின் நலனுக்காக ஒவ்வொரு முடிவையும் ஆராய்ந்து மத்திய அரசு எடுத்துவருகிறது என்றார்.