தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 10, 2020, 8:48 PM IST

ETV Bharat / business

'ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதித் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்'

டெல்லி: பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையின் முக்கிய முன்னெடுப்பாக சிறு, குறு நிறுவனங்களுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

SBI
SBI

ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்யும் விதமாக மத்திய அரசு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்சார்பு இந்தியா சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் வெளியான இந்த அறிவிப்பில் வேளாண்துறை, ஊரக வேலைவாய்ப்பு, சிறு,குறு தொழில் எனப் பல்வேறு தரப்புகளுக்கான நிதித்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்படி, சிறு, குறு நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார். பிக்கி அமைப்புடன் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் பேசிய அவர், ”சிறு, குறு நிறுவனங்கள் நிதி, வருவாய்ப் பற்றாக்குறை சந்தித்துவரும் இந்த வேளையில் அதைச் சீர்செய்யவே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பணப்புழக்க பாதிப்பைச் சீர்செய்ய வங்கிகள் அவசரக்கால கடனுதவிகள் மேற்கொண்டுவருகின்றன. மேலும் தங்கத்தின் மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஒருமாத காலத்தில் இதுவரை 88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஈராக்கின் நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

ABOUT THE AUTHOR

...view details