கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிவரை நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கியுள்ளன.
இதன் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளான தினக்கூலிகள், சிறு, குறு வணிகர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், அடிதட்டு மக்கள், ஆகியோர் நலன் காக்கும் விதமாக முதற்கட்ட அவசரநிதியாக 1.7 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.