நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள் - முக்கிய முடிவுகள்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் தொகுப்பு...

shak
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் கீழே:
- வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதம் 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, தற்போது 5.40 சதவிகிதமாக உள்ளது.
- ரிவர்ஸ் ரெப்போ வட்டியின் அளவு 5.15 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது.
- டிசம்பர் 2019 முதல் என்.இ.எப்.டி. எனப்படும் இணையதள பணப்பரிவர்த்தனை 24 மணிநேரமும் செயல்படுத்தப்படும்.
- நாட்டின் வளர்ச்சி விகிதக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடானது 6.9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆறு மாதத்திற்கான சில்லறை பணவீக்க விகித இலக்கு 3.5 முதல் 3.7 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டுச் சந்தையின் தேவையை அதிகரிக்கவும், தனியார் முதலீட்டை அதிகரிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த நிதிக்கொள்கைக் கூட்டம் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும்.
Last Updated : Aug 7, 2019, 2:30 PM IST