தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மக்களை எச்சரிக்கும் வருமானவரித் துறை! - வரி செலுத்துவோர்

டெல்லி: பணத்தை திருப்பியளிப்பதாக உறுதியளிக்கும் எவ்வித தொடர்புகளும் மக்களுக்கு அனுப்பப்படுவதில்லை என வருமான வரித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

i-t-dept-cautions-people-against-phishing-e-mails-promising-refund
i-t-dept-cautions-people-against-phishing-e-mails-promising-refund

By

Published : May 3, 2020, 6:11 PM IST

வருமான வரித்துறை சார்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், ''வரி செலுத்துவோர் ஜாக்கிரதை. பணத்தைத் திருப்பியளிப்பதாக அனுப்பப்படும் போலியான தொடர்புகளை மக்கள் க்ளிக் செய்து பார்க்க வேண்டாம். அதுபோன்ற எந்தவித தொடர்புகளையும் வருமான வரித்துறை அனுப்பவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரையில் வரி செலுத்துவோர், கார்ப்பரேட்டுகள், சிறு - குறு தொழிலாளர்கள் என 14 லட்சம் பேருக்கு ரூ.9 ஆயிரம் கோடி வரை பணம் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் நிவாரணம் வழங்கும் விதமாக ஏப்ரல் 8ஆம் தேதியன்று நிதியமைச்சகத்தின் சார்பாக ரூ.5 லட்சம் வரையிலான பணம் திருப்பியளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியர்களின் தகவல்களைத் திருடுகிறதா சியோமி?

ABOUT THE AUTHOR

...view details