தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரிசர்வ் வங்கி உபரி நிதி; பொருளாதார வல்லுநர்கள் கருத்து - பொருளாதார வளர்ச்சிக்கு உபரி நிதி நிரந்தர தீர்வு தருமா

மும்பை: ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப் போகும் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி பொருளாதார வளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு தராது என பல்வேறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

will surplus change indian economy

By

Published : Aug 28, 2019, 11:56 AM IST


பல்வேறு கணக்கீட்டின் படி ரிசர்வ் வங்கியிடம் ரூ.9 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தம்மிடம் உள்ள உபரி நிதியின் ஒரு பகுதியை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு வழங்கும் நிலைபோல், இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பற்றி வங்கி சார்ந்த நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக ட்வீட் செய்த ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியிடம் திருடுவது வேலைக்காகாது என மத்திய அரசை சாடியிருந்தார்.

மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வரும் உபரி நிதி பொருளாதாரத்தை சரி செய்ய முழுமையான நிவாரணம் தராது என கோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐடிஎஃப்சி நிறுவனம், உபரி நிதி தொகையை பொருளாதார மறு சீரமைப்புக்கு
பயன்படுத்துவதன் மூலம் தற்போது உள்ள நிதி பற்றாக்குறை இலக்குகளை பூர்த்தி செய்வார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் இதில் கவலை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details