தமிழ்நாடு

tamil nadu

Budget 2022 LIVE Updates: பெண்ணாறு- காவிரி இணைப்பு உள்ளிட்ட பட்ஜெட்டின் முழு விவரம்- உள்ளே!

By

Published : Feb 1, 2022, 9:23 AM IST

Updated : Feb 1, 2022, 12:56 PM IST

Sitharaman
Sitharaman

12:39 February 01

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, 90 நிமிடங்கள் பட்ஜெட் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, நிதி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

4ஆவது பட்ஜெட்

நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்த 4ஆவது பட்ஜெட் இதுவாகும். இதற்கு முன்பு 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

12:33 February 01

பட்ஜெட் நிறைவு - வரி விதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து, பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் ஆகிறது. 2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விதிப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. ஆக தனிநபர் வருமான உச்ச வரம்பு எவ்வித மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடரும்.

12:08 February 01

சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு

டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் பேமெண்ட ஊக்குவிப்பு, உள்நாட்டில் தயாரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆகிவருகின்றன.

சரக்கு சேவை வரி வசூல்

ஜனவரி (2022) 1.40 லட்சம் கோடி நாட்டுக்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

சலுகை

வைரங்கள் மற்றும் ஆபரண கற்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும்.

மொபைல், சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்ட பொருள்களுக்கு இறக்குமதியில் சலுகை

12:02 February 01

ராணுவம்- டிஜிட்டல் கரன்சி- மாநிலக் கடன்

  1. 2023ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகிறது. டிஜிட்டல் கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும்.

மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன்

  1. மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.

ராணுவம்

  1. ராணுவத்தில் உள்நாட்டு உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

11:50 February 01

5ஜி ஏலம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  1. 2022-23 ஆம் ஆண்டு தொடங்கி 2025ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்திற்கும் ஆப்டிக்கல் பைபர் திட்டம் வழங்கப்படும். அனைத்து கிராமங்களும் இ-சேவை திட்டத்தின் கீழ் இணைக்கப்படும்.
  2. நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  3. மின்சார வாகனங்களில் பேட்டரியை சார்ஜ் போட்டுக்கொள்வதற்கு பதிலாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திட்டம்.
  4. வேளாண் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  5. நடப்பாண்டில் 5ஜி ஏலம் விடப்படும்.

11:36 February 01

18 லட்சம் பேருக்கு வீடு

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் 18 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும். இதற்காக 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் திட்டங்கள்

மகளிர் மேம்பாட்டிற்காக 3 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள், 1) சகி இயக்கம், 2) வாத்சல்யா இயக்கம் மற்றும் 3) ஊட்டச்சத்து 2.0 ஆகியன ஆகும். இந்தத் திட்டங்கள் மகளிர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும்.

11:33 February 01

பட்ஜெட் முக்கிய நிகழ்வுகள்- வங்கி

நாட்டில் டிஜிட்டல் பேமெண்டை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. ஒன்றரை லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பேமெண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  2. 75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் அமைக்கப்படும்.
  3. ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

11:31 February 01

பட்ஜெட் முக்கிய நிகழ்வுகள்- டிஜிட்டல் பல்கலைக்கழகம்

  1. மாணவர்களுக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
  2. நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்படும். டிஜிட்டல் முறையில் கற்ப்பித்தல் ஊக்குவிக்கப்படும்.
  3. 1-12ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்.
  4. கூடுதலாக 200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும்.

11:14 February 01

பட்ஜெட் முக்கிய நிகழ்வுகள்

  • நாடு முழுவதும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • 22 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்படும்.
  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். வேளாண் பொருள்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.
  • ட்ரோன் மூலம் விவசாய நிலங்கள் அளவீடு, கண்காணிப்பு
  • 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு
  • 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் புதிதாக வழங்கப்படும்.
  • ரூ.44 ஆயிரம் கோடி செலவில் நீர்ப் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • பெண்ணாறு காவிரி இணைப்பு உள்ளிட்ட திட்டத்துக்கு ஒப்புதல்.

10:59 February 01

இளைஞர்கள் தொழில் தொடங்க முன்னுரிமை

2022-23ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட லேப் டாப்பில் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில், “தொடர்ந்து 2ஆவது முறையாக காகிதமில்லா மின்னணு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையில் முன்னேறிவருகிறோம். கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளை சரி செய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்துவருகிறது.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்துவருகிறது. இந்தப் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் பாதிக்கப்படாத வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினால் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்ஜெட் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கானது.

சிறு குறு நடுத்தர தொழில்களை பாதிக்கும் வகையில் வரிவிதிப்புகள் இருக்காது. மேலும் இளைஞர்கள் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.

10:52 February 01

பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிநிலை அறிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முழுவதும் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட் ஆக இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக நேற்று (ஜன.31) வெளியான நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் ஆண்டு 8 முதல் 8.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது.

10:22 February 01

பிரதமர் நரேந்திர மோடி வருகை

பிரதமர் நரேந்திர மோடி வருகை

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கலாகவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றம் வந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் இதர மத்திய அமைச்சர்களும் பாராளுமன்றம் வந்தனர்.

10:11 February 01

பாராளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றம் வந்தார். காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்தப் பட்ஜெட் காகிதமில்லா மின்னணு பட்டஜெட் ஆக தாக்கல் செய்யப்படுகிறது.

#UnionBudget2022-23

10:02 February 01

பாராளுமன்றம் வந்த பட்ஜெட் பிரதிகள்!

நாடாளுமன்றம் வந்த பட்ஜெட் பிரதிகள்!

இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கு பட்ஜெட் பிரதிகள் ஏற்றப்பட்ட சரக்கு வாகனம் வந்தடைந்தது. அந்தப் பிரதிகளை சோதனைக்கு பின்னர் பாதுகாவலர்கள் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

#UnionBudget2022

09:44 February 01

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

2022-23 பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் ( Dr Bhagwat Kishanrao Karad) மற்றும் ஸ்ரீ பங்கஜ் சௌத்ரி (Shri Pankaj Chaudhary) ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது மூத்த உயர் அலுவலர்களும் உடனிருந்தனர்.

09:34 February 01

Budget 2022: இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வு!

இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வு

இன்னும் சற்று நேரத்தில் நாட்டின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் ஆகிவருகின்றன. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 582.85 புள்ளிகள் அதிகரித்து 58,597.02 எனவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 156.20 புள்ளிகள் உயர்ந்து 17,496.05 எனவும் வர்த்தகம் ஆகிவருகின்றன.

09:15 February 01

Budget 2022 LIVE Updates: நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாராளுமன்றம் நோக்கி புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். முன்னதாக அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ சந்திக்கிறார்.

Last Updated : Feb 1, 2022, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details