நேற்றய தினம் (நவ.22) ஏர்டெல் (airtel) நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான (prepaid plans) கட்டணத்தை 25 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இத்துடன் டாப் அப் (top up) திட்டங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டன. அந்த வகையில் ரூ.48 திட்டத்தை ரூ. 10 உயர்த்தி ரூ.58 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 98 திட்டமானது ரூ.118 ஆகவும், ரூ. 251 திட்டம் ரூ. 301 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோலவே ஆண்டு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இக்கட்டண உயர்வு, ஏஆர்பியு நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரமுக்கு தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக ஏர்டெல் (airtel) நிறுவனம் தெரிவித்தது.
ப்ரீபெய்ட் கட்டண உயர்வு
இந்நிலையில் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் (prepaid plans) கட்டணங்களை 25 விழுக்காடு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இக்கட்டண உயர்வு, பயனருக்கான தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சராசரி வருவாயை மேம்படுத்த உதவும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இக்கட்டண உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக வோடாபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 28 நாள்களுக்கான திட்டத்துக்கான கட்டணம் ரூ. 79-ல் இருந்து ரூ. 99 ஆகவும், பல திட்டங்கள் மற்றும் டேட்டா பேக்கேஜ்களின் (Data package) கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Airtel New Tariffs : கட்டணம் உயர்வு - ஏர்டெல் பயனாளர்கள் அதிர்ச்சி