உலகம் முழுவதும் இணையவழித் தகவல் பரிமாற்றச் செயலியாக வாட்ஸ்அப் செயலி 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களால் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சமீபத்தில் அப்டேட்டில் கொண்டுவந்துள்ள தனிநபர் கொள்கை மாற்றத்தால், நமது தரவுகள் பேஸ்புக்குடன் இணைந்துவிடும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, பலர டெலிகிராம், சிக்னல் செயலிகளின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பினர்.
இதையடுத்து, அவசர அவசரமாக வாட்ஸ்அப் நிறுவனம் உங்களின் தனிப்பட்ட தகவலை யாரும் பார்த்திட முடியாது என அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களில் டெலிகிராம் செயலியில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.