கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்தன. ஊரடங்கு காரணமாக பல நாடுகளிலும் வேலையிழப்பு என்பது சமீபத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. வேலையிழப்பையும் நாட்டின் பொருளாதார இழப்பையும் சமாளிக்க பல நாட்டு அரசுகளும் திணறிவருகிறது.
இந்த கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜாகுவார் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஜாகுவார் வாகன விற்பனையில் சுமார் 30.9 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று ஜாகுவார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறுவனத்தை மாற்றவும், செயல்திறனை அதிகரிக்கவும் சில கடினமான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.