தமிழ்நாடு

tamil nadu

பங்குதாரர்கள் 25 விழுக்காடு தொகையை மட்டும் கொடுத்தால் போதும்! - ரிலையன்ஸ்

By

Published : May 18, 2020, 2:43 PM IST

எண்ணெய் முதல் தொலைதொடர்பு துறை வரை கால் பதித்து அசத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குதாரர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கையெழுத்திட்ட பங்குகளுக்கான 25 விழுக்காடு தொகையை மட்டும் இந்த ஆண்டு செலுத்தினால் போதும் என்று அந்நிறுவனம் கனிவு காட்டியுள்ளது. ஒவ்வொரு 15 பங்கிற்கும், ஒரு பங்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

pay only 25 percent reliance
pay only 25 percent reliance

டெல்லி: ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் நிறுவனத்தின் புதிய பங்குதாரர்கள், அவர்கள் கையகப்படுத்திய பங்குகளுக்கான 25 விழுக்காடு தொகையை மட்டும் இந்தாண்டு செலுத்தினால் போதும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 15 பங்குகளுக்கும், ஒரு பங்கை இலவசமாக பங்குதாரர்களுக்குரிலையனஸ் நிறுவனம் கொடுத்துள்ளது. வர்த்தகத்தின்போது இந்த பங்கு கொடுக்கப்பட்ட விலையானது 1,257 ரூபாயாகும்.

தற்போது பங்குகளின் விலை உயர்வைச் சந்தித்தாலும், வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட தொகையே கணக்கில் இருக்கும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைகளை நிறுவனத்திற்காக விட்டுத் தாருங்கள்: ஊழியர்களிடம் கோரிக்கை

25 விழுக்காடு தொகையை இந்த வருடம் செலுத்தவேண்டும், 2021ஆம் ஆண்டு மே மாதம் 25 விழுக்காடு தொகையையும், முறையே நவம்பர் மாதம் 50 விழுக்காடு தொகையையும் பங்குதாரர்கள் செலுத்த நிறுவனம் கூறியுள்ளது

ABOUT THE AUTHOR

...view details