தமிழ்நாடு

tamil nadu

இந்திய பயனர்களை மிரட்ட வரும் மோட்டோரோலா Edge+ ஸ்மார்ட்போன்!

By

Published : May 20, 2020, 3:21 PM IST

டெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த படைப்பான Edge+ ஸ்மார்ட்போன் அதிக வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

மோட்டோரோலா
மோட்டோரோலா

சீன செல்போன் நிறுவனங்கள் குறைவான விலையில் அதிக வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அதேசமயம் கிளாஸாக எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகமாகும் செல்போன்களின் விலையும் தாறுமாறாக இருக்கும். ஆகையால், இத்தகைய செல்போன்கள் மினி பீஸ்டாகவே கருதப்படுகின்றன.

எப்போதும் சைலன்டாக செல்போன்களை வெளியிடும் மோட்டோரோலா நிறுவனம், தனது அடுத்த படைப்பாக மோட்டோரோலா Edge+ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போனின் விற்பனை விலை 74 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோட்டோரோலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போனில் அதீத வேகம், ஆடியோ திறன், வியப்பூட்டும் டிஸ்பிளே, பிரமிக்க வைக்கும் கேமரா, மிகப்பெரிய பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் அறிமுகமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கிடைச்சிருச்சு கால் ரெக்கார்டு வசதி' - மகிழ்ச்சியில் நோக்கியா பயனர்கள்!

ABOUT THE AUTHOR

...view details