பயணிகள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இரு இருக்கைகளை தங்களின் இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள முடியும் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு பயணச்சீட்டு மதிப்பில் இருந்து 25 விழுக்காடு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. மேலும் இதனை தங்களின் பயணச்சீட்டு விற்பனை முகவர்கள், இண்டிகோ அலுவலகம் என எங்கும் பெற முடியாது என்றும் இண்டிகோ இணையதளத்தில் மூலமாக கைப்பேசி செயலியின் மூலமாகவோதான் இப்பதிவை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.