கரோனா தொற்றின் காரணமாக பல முக்கிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தப்படியே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில், உலகளவில் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களும் 2 மாதங்களாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக பெரும்பாலானோரை வீட்டிலிருந்தபடியே 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி செய்ய வைக்க திட்டமிட்டுளோம்.