செல்போன்களில் புதிய தொழில் நுட்பத்தினால் பல மாற்றங்கள் தற்போது வந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் நோக்கியா நிறுவனத்தின் செல்போன்கள் தான் அனைவரின் கைகளில் தென்படும். ஒரு காலத்தில், இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த நோக்கியா செல்போன்கள், சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் வருகையால் விற்பனையில் சரிவைக் கண்டன.
இருப்பினும், நோக்கியா தனது அடுத்த முயற்சியாக கைபேசி சந்தையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவ்வப்போது புதிய வசதிகளைப் பயனாளர்களுக்கு வழங்கிவரும் நோக்கியா, பயனாளர்களின் நீண்ட நாள் ஆசையைத் தற்போது நிறைவேற்றியுள்ளது. நோக்கியாவின் 10க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள்ஸ் போன் செயலியில் (Googles Phone app) கால் ரெக்கார்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.