தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

5ஜி சேவைக்காக குவால்காம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏர்டெல்! - India's first telco to demonstrate 5G over a LIVE commercial network

டெல்லி: இந்தியாவில் 5ஜி இணைய சேவையின் விரிவாகத்தை வேகப்படுத்த, தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், குவால்காம் இந்தியா பிரைவட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

Airtel
ஏர்டெல்

By

Published : Feb 23, 2021, 10:15 PM IST

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி இணைய சேவை சோதனையைஹைதராபாத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டது. வர்த்தக ரீதியாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சோதனை முயற்சிகளை வெற்றிகரமாக முடித்த முதல் நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறது.

இந்நிலையில், 5ஜி சேவை அறிமுகத்தை வேகப்படுத்துவதற்காக குவால்காம் இந்தியா பிரைவட் லிமிடெட் நிறுவனத்துடன், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்விரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம், 5ஜி சேவையின் தரத்தை மேலும் வலுப்படுத்தி, வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் ஜிகாபைட் வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க வழி செய்கிறது.

இதுகுறித்து பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ரன்தீப் செகோன், "குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் சகாப்தத்தில் அடுத்த கட்டத்திற்கு இந்தியாவை கொண்டு செல்லவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவில் விரைவில் தடையை நீக்குவோம் - பேஸ்புக் நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details