Stock Market: கச்சா எண்ணெய் விலை உயர்வு, வரவிருக்கின்ற பட்ஜெட் எப்படி இருக்குமோ என்னும் அச்சம் காரணமாக, கிடைத்தவரை லாபம் என சிலர் பங்குச்சந்தையை விட்டு வெளியேறத்தொடங்க, மீண்டும் சரிவு ஆரம்பித்தது.
கூடவே, புதியவகை Neo Cov என்கிற வைரஸ் குறித்து சீனாவின் வூஹான் நகர விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுப்பதாகத் தகவல் பரவியது.
உலக பங்குச்சந்தைகளுக்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக்கொள்வது இந்திய முதலீட்டாளர்களுக்கு கைவந்த கலை என்பதால், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குகள் உயர உயர சென்றன. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி 250 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளில் 700 மில்லியன் அளவிற்கு முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியானது.