நாட்டில் ஐந்தாண்டுகளுக்குப் பின் தொலைத்தொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த திங்கள் (மார்ச்1) மற்றும் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இரண்டு நாளில் ஏலத்திற்குப் பின் அரசு ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.57,122.65 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.18,699 கோடி, வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.1,993.40 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன.