தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 9:40 PM IST

ETV Bharat / business

கோவிட்-19 தொற்றால் பாதிப்பு என்ன? நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கிறது செபி

டெல்லி: கரோனா லாக்டவுன் காரணமாக நிறுவனங்கள் சந்தித்த நிதிச் சிக்கல் குறித்த விவரங்களை சமர்பிக்குமாறு செபி அமைப்பு தெரிவித்துள்ளது.

SEBI
SEBI

இந்தியாவின் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி வர்த்தக நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதார வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அனைத்து நிறுவனங்களும் தங்கள் இழப்பு குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை சீரமைக்க அரசு சார்பில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செபி தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக வணிக செயல்பாடில் சுணக்கம், நிதி நிலைமையில் ஏற்பட்ட தாக்கங்களை விரிவாக நிறுவனங்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு செபி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறு, குறு நிறுனங்கள் கோவிட்-19 பொருளாதார தாக்கத்திலிருந்து மீண்டுவர சுமார் ரூ. 3 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை

ABOUT THE AUTHOR

...view details