தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2019, 9:07 PM IST

ETV Bharat / business

வங்கி ஊழல் ராகேஷ் வர்த்தமானுக்கு 22ஆம் தேதிவரை அமலாக்கத் துறை காவல்

மும்பை: பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வர்த்தமான், அவரின் மகனுக்கு வருகிற 22ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PMC


பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நான்காயிரத்து 355 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள், வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த 17ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. இதேபோல் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராடெக்ஸர் லிமிடெட் (ஹெச்.டி.ஐ.எல்.) நிறுவன நிர்வாக இயக்குநர் ராகேஷ் வர்த்தமான், அவரின் மகனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமும் தற்போது விசாரணை நடந்துவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கித் தொடர்பான சரியான தகவல்களை அளிக்கவில்லை. மேலும் சில வங்கிக் கணக்குகள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக இல்லை. கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

அந்த கணக்குகள் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்துள்ளது. இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில், இரு நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டு தற்போது இந்த ஊழல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஜோய் தாமஸ் மீது நம்பிக்கை மீறல், மோசடி ஆகிய குற்ற வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ராகேஷ் வர்த்தமான் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகேஷ் வர்த்தவான், அவரின் மகன் ஆகியோருக்கு வருகிற 22ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது சிறப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: பிஎம்சி வங்கியில் ரூ.4,375 கோடி ஊழல் - பிரபல பாலிவுட் நடிகருக்கு சிக்கல்?

ABOUT THE AUTHOR

...view details