நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, அவை மேம்படுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கையால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி புழக்கத்திற்கு வராது என்ற தகவல் தீயாய் பரவத் தொடங்கியது. இது மக்களிடையே தேவையற்ற பரபரப்பை உண்டாக்கிய நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது குறித்து ஏடிஎம் மையங்களைப் பராமரிக்கும் அமைப்பான APMEA அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் ராமமூர்த்தி வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.