தமிழ்நாடு

tamil nadu

லண்டன் நீதிமன்றத்தில் காணொளி மூலம் நிரவ் மோடி ஆஜர்!

லண்டன்: கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நீடிப்பது குறித்து இன்று காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

By

Published : Apr 26, 2019, 11:33 AM IST

Published : Apr 26, 2019, 11:33 AM IST

நீரவ்

வைர வியாபாரியான நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூபாய் 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்தது 2018 ஜனவரி மாதம் அம்பலமானது. இதனால் இந்தியாவை விட்டு தப்பியோடினார் நீரவ்.

இந்த கடன் மோசடி குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டும், ஏலத்தில் விற்கப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குத் தப்பியோடிய நிரவ் மோடி, சுதந்திரமாக வசித்துவருவதாக வந்த தகவலையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசுக்கு அமலாகத் துறை கோரிக்கை விடுத்திருந்தது.

அதனைத் ஏற்று, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட 28 நாள் நீதிமன்றக் காவல் நிறைவுபெறவுள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளது.

விசாரணையின்போது, நிரவ் மோடி காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details