இந்தியாவில் முதன்முறையாக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கும் முயற்சியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதற்கான அனுமதி குறித்து மத்திய அரசிடம் பேசிவருவதாகத் தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் குறைந்த விலை 4ஜி டேட்டா வசதியை அறிமுகம்செய்து டேட்டா புரட்சியை மேற்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 37 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஜியோவின் வருகைக்குப்பின் மற்ற முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன்-ஐடியா ஆகியவற்றின் சந்தை ஆட்டம்கண்டுள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் கடன் காரணமாக நிதிச்சுமையில் சிக்கித் தவித்துவருகின்றன.