இந்தியாவின் உப்பு உற்பத்தி கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் 30 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. கோவிட் 19 பரவல் தடுப்பு காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் விளைவாக இந்த உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேவளை தேவைக்கு மேல் இருப்பு கைவசம் உள்ளதால், இந்த சரிவின் காரணமாக விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது. உப்பு ஏற்றுமதியில் உலகின் நான்காவது பெரிய நாடாகத் திகழும் இந்தியா மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உற்பத்தி பெரும் முடக்கத்தைக் கண்டது. ‘
மேலும் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது உப்பு உற்பத்திக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் பி.சி. ராவல் ஈடிவி பாரத்திற்கு தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.