தமிழ்நாடு

tamil nadu

பொருளாதார மீட்டெடுப்புத் திட்டத்தை அறிவிக்கத் தயாராகும் இந்தியா!

By

Published : May 8, 2020, 1:30 PM IST

டெல்லி: கோவிட்-19 பரவல் காரணமாக சரிவைச் சந்தித்துள்ள இந்திய பொருளாதாரத்தைக் காக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Govt working on financial package
Govt working on financial package

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தொழிற்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால், இந்திய பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது.

தற்போதுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில்கொண்டு சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து தொழில்துறையையும் மீட்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகச் சாலை போக்குவரத்துத் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை செயலர் கிரிதர் அரமனே கூறுகையில், "சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு மட்டுமின்றி அனைத்து தொழிற்துறைக்கும் ஏற்ற வகையில் பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை துறை சார்ந்தவர்களுடன் இணைந்து மத்திய அரசு உருவாக்கிவருகிறது. இது அனைத்து துறையினருக்கும் ஏற்ற ஒரு திட்டமாக இருக்கும்" என்றார்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும், பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையின் பங்கு மட்டும் 29 விழுக்காடு. இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 48 விழுக்காடு இதன் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. பல கோடி மக்களுக்கு வேலை அளித்துவந்த இத்துறை கோவிட்-19 பரவல் காரணமாக முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் அமெரிக்க நிறுவனங்களின் ஜியோ முதலீடுகள்!

ABOUT THE AUTHOR

...view details