தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2020, 5:10 PM IST

ETV Bharat / business

தனியார் துறைக்கான கடனுதவியை அதிகப்படுத்த வேண்டும்: அமிதாப் கந்த்

தற்போதைய நிலையில் நாட்டின் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி கடன் முதலீடு தேவை என அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.

Amitabh Kant
Amitabh Kant

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த், முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தனியார் துறை சார்ந்த முதலீடுகள் அதிகரிக்க வேண்டிய காலகட்டம் இது.

சிறு, குறு நிறுவனங்கள் மூலம்தான் நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை மேம்படும். சிறு, குறு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வளமாக செயல்பட அவற்றுக்கு கடனுதவி மிக அவசியம்.

சர்வதேச நாடுகளில் ஜி.டி.பி. மற்றும் தனியார் துறை சார்ந்த கடனுதவியை ஒப்பிடும்போது, இந்தியாவில் அதன் விழுக்காடு குறைவாகக் காணப்படுகிறது. பொருளாதரத்தில் வேகமாக வளர்ந்துவரும் சீனா போன்ற நாடுகளில் தனியார் நிதிச்சேவைகள் சிறப்பாக உள்ளன. தற்போதைய நிலையில் நாட்டின் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி கடன் முதலீடு தேவை எனக் கூறினார்.

அத்துடன் முக்கிய 10 துறைகளை கண்டறிந்து அவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், அமிதாப் கந்த் நாட்டின் ஜனநாயகம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஜனநாயகத் தன்மை அதிகம் காணப்படுவதால் சீர்திருத்த நடவடிக்கைகள் எளிதாக மேற்கொள்ள இயலவில்லை என்று கூறியிருந்தார். புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை குறிப்பிடும் வகையில் அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:அதிர்ச்சியளித்த ஃபெராரி சிஇஓ காமிலெரியின் ஓய்வு!

ABOUT THE AUTHOR

...view details