தமிழ்நாடு

tamil nadu

பொருளாதார முறைகேடு குறித்து ப. சிதம்பரம் ட்வீட்

டெல்லி: இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் சரியத் தொடங்கி உள்ளது என முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

By

Published : May 30, 2020, 12:20 AM IST

Published : May 30, 2020, 12:20 AM IST

Updated : May 30, 2020, 12:33 AM IST

GDP figures
GDP figures

2019-2020ஆம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2 விழுக்காடாக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை, மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1 விழுக்காடாக உள்ளது. மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது; கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று துறை சார் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி நான்கு விழுக்காடாக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால், இப்போது அதை விட ஜிடிபி குறைவாக இருக்கிறது.

நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி வெறும் 3.1 விழுக்காடு தான் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், இது லாக்டவுன் தொடங்கும் முந்தைய காலத்திற்கான ஜிடிபி ஆகும். நான்காவது காலாண்டில் அதிக நாட்கள் லாக்டவுன் இல்லை.

நான்காவது காலாண்டில் வெறும் 7 நாட்கள் மட்டுமே லாக்டவுன் இருந்தது. ஆனாலும் கூட, அந்த காலாண்டில் அதிக அளவு ஜிடிபி சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது புரிகிறதா பாஜக அரசின் மோசமான நிதி கொள்கை மற்றும் செயல்பாடு குறித்து; எவ்வளவு மோசம்' என்று ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!

Last Updated : May 30, 2020, 12:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details