வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக முன்னெடுப்புகளை மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக பல்வேறு துறை சார் நிபுணர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நிதி, முதலீட்டுச்சந்தை, சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி, குடிநீர் மற்றும் தூய்மை, வர்த்தக சங்கம், உற்பத்தி, சேவைச் துறை, உட்கட்டமைப்பு, எரிசக்தி, வேளாண்மை, தொழில்முனைவோர், பொருளாதார நிபுணர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.