தொழில்துறை பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்குதலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று தொடங்கினார்.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனையை ஒரு வாரத்திற்கு மத்திய அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், நிதிச்சேவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.