நாட்டில் உள்ள போலி ஜி.எஸ்.டி. கணக்குகளை கண்டறிய மத்திய அரசு கடந்த இரு மாதங்களாக தீவர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மத்திய வருவாய் அமைச்சகம் சார்பில் ஜி.எஸ்.டி. தொடர்பான அனைத்து புள்ளிவிவரம், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் சந்தேகத்திற்கு இடமான கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதன்மூலம், சுமார் 1.63 லட்சம் போலி ஜி.எஸ்.டி. எண்கள் செயல்பட்டுவந்தது கண்டறியறிப்பட்டது. இரு மாதங்களாக நடைபெற்ற இந்த அதிரடி ஆய்வில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.