இந்தியாவில் 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாகன விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு வாகன நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தென் கொரியாவைச் சோர்ந்த கியா மோட்டஸ் நிறுவனம் தன் முதல் காரான செல்டோஸ் என்ற எஸ்யூவி ரக காரை இந்தியாவில் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட செல்டோஸ் 1.5 பொட்ரோல், 1.5 டீசல், 1.4 டர்போ பெட்ரோல் என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கிறது. காற்றுக்கு குறைத்த மாசு ஏற்பத்தும் BS-VI தரத்தில் இயங்கக்கூடிய இந்த வாகனம் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும், ஆஜானுபாகுவாகவும் காட்சியளிக்கும். இந்த செல்டோஸ் காரின் விலை ரூ.9.69 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல சிறப்பம்சங்களுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்டோஸ் குறித்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனைத் தலைவர் மோகன் பாட் ஈடிவி பாரத் செய்திகளுக்குப் பேட்டியளித்தார்.
அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...
மற்ற ஸ்யூவி கார்களிலிருந்து செல்டோஸ் எவ்வாறு வேறுபடுகிறது?
செல்டோஸ் மிகவும் ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்ட கார். சொகுசு கார்களில் இல்லாத அம்சங்கள் பல இந்த காரில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 1.5 பொட்ரோல், 1.5 டீசல், 1.4 டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் வேரியண்டுகளில் இது கிடைக்கிறது. BS-VI தரத்தில் இயங்கக்கூடியது.
மற்ற காம்படிடர்ஸ்களோடு எப்படி போட்டிப்போட நினைக்கிறீர்கள்?
இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார்போல் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மனதளவில் இளமையாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.