பிரென்ட் கச்சா எண்ணெய் 3.3 விழுக்காடு உயர்ந்து, மார்ச் 6ஆம் தேதிக்கு பிறகு அதிக விலையான பேரலுக்கு 40 டாலர் என்ற நிலையை எட்டியது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 3.9 விழுக்காடு அதிகரித்து பேரலுக்கு 37 டாலராக உயர்ந்தது.
மூன்று மாதங்களில் உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை! - Business news in tamil
பல நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.
![மூன்று மாதங்களில் உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை! Crude oil price](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:33-crude-oil-0306newsroom-1591171804-369.jpg)
Crude oil price
ரஷ்யா மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு உற்பத்தியில் நாளொன்றுக்கு 97 லட்சம் பேரல்கள் வரை குறைத்துள்ளதுடன் இந்த குறைப்பு நடவடிக்கை ஆகஸ்ட் வரை நீளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பன்னாட்டு தேவை அதிகரித்து வருவதாலும் உற்பத்தி கட்டுப்பாடு நீட்டிக்கப்படுவதாலும், கச்சா எண்ணெய் விலை இனி வரும் நாட்களில் தொடர்ந்து உயரும் என கூறப்படுகிறது.