தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு வழி சொல்லும் கட்கரி - நிதின் கட்கரி இந்திய பொருளாதாரம்

மும்பை: கச்சா எண்ணெய்க்குப் பதிலாக மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

Gadkari

By

Published : Sep 28, 2019, 2:40 PM IST

மும்பையில் தொழில் துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாற்று எரிவாயு குறித்துப் பேசினார்.

அப்போது, "இந்தியாவின் வாகன எரிவாயு தேவை கச்சா எண்ணெய் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆண்டொன்றுக்குச் சராசரியாக சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குச் செலவிடப்படுகிறது. குறிப்பாக விமான போக்குவரத்துக்கு கச்சா எண்ணெய்த் தேவை அதிகரித்துவருகிறது" என்றார்.

அதேவேளையில், மாற்று எரிவாயுவுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாகக் கூறிய கட்கரி, எத்தனால், ப்யூட்டனால் போன்ற எரிபொருட்களை கார்கள் விமான போக்குவரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், விமானப் போக்குவரத்துத் துறையில் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மிச்சப்படுத்தலாம். இதன்மூலம் அந்நிய செலாவணியில் அத்தொகையானது மிச்சப்படுத்த முடியும் என்றார்.

மாற்று எரிசக்தியை நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக இந்தியா நிச்சயம் உருபெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 50 வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வேத்துறை பரிசீலனை

ABOUT THE AUTHOR

...view details